search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனவரி 10-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம்: மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
    X

    ஜனவரி 10-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம்: மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், அவுட்சோசிங் முறையை முழுவதுமாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.

    மேலும், வரும் 20-ந்தேதி வேலைநிறுத்தத்திற்கான நோட்டீசை அரசுக்கு வழங்குவது என்றும், 27-ந்தேதி அனைத்து பொறியாளர் அலுவலகம் முன்பாகவும் வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டங்கள் நடைபெறும் எனவும் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×