என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை
- இரவு வரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு, சுரேஷ் தனது அறையில் போய் படுத்து உள்ளார்.
- தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழைய சென்ட்ரல் தியேட்டர் அருகேயுள்ள காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தொழிலதிபர் சுரேஷ். இவருக்கு சொந்தமாக ஜூவல்லரி தொழில் செய்து வருகிறார். இதனை தவிர ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் இவர் வசித்து வந்த அவரது வீட்டில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சுரேஷ் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்துள்ளார். இரவு வரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு தனது அறையில் போய் படுத்து உள்ளார். இன்று காலையில் தான் துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்த தொழிலதிபர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சுரேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீடு முன்பு திரண்டு உள்ளனர். கிருஷ்ணகிரி டவுனில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் குவிக்கப்பட்டு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்