search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெயரை மாற்றிய பீலா ராஜேஷ்
    X

    பெயரை மாற்றிய பீலா ராஜேஷ்

    • தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்தவர் பீலா ராஜேஷ்.
    • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் திறம்பட பணியாற்றியவர்.

    சென்னை:

    தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ராஜேஷ்.

    பீலாவின் தந்தையான எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி பகுதியாகும். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

    கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் திறம்பட பணியாற்றியவர்.

    சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×