search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க மீண்டும் அனுமதி-  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    X

    இன்று காலை சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதையும் படத்தில் காணலாம்.

    குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க மீண்டும் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
    • அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்தும் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த சாரல் மழையின் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு திடீரென தண்ணீர் வருவது அதிகரித்தது. பின்னர் அது வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த தால் வெள்ளப்பெருக்கும் குறைந்தது.

    இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இன்று காலை ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் மிதமான அளவிலும், பழைய குற்றால அருவியில் குறைந்த அளவும் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் குற்றாலத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இன்று அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Next Story
    ×