என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பெருந்துறை அருகே வழிப்பறி செய்ய முயன்ற 3 வாலிபர்கள் கைது
- சின்னசாமி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இரவு நேர காவலாளிகள் வர, அதைப்பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
- 3 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (65). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி பாய்லரில் விறகு போடும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சின்னசாமி அவர் தங்கியிருந்த கம்பெனியில் இருந்து அருகில் உள்ள விடுதிக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் சின்னசாமியை வழிமறித்து செல்போன் கொடுத்தால் பேசிவிட்டு தருகிறேன் என கூறியுள்ளனர்.
ஆனால் சின்னசாமி சந்தேகம் அடைந்து தர மாட்டேன் என மறுக்க 3 பேரும் சின்னசாமியிடம் நாங்கள் ஈரோட்டில் பெரிய ரவுடி செல்போன், வாட்ச்சினை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். சுதாரித்து கொண்ட சின்னசாமி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இரவு நேர காவலாளிகள் வர அதைப்பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசில் சின்னசாமி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தப்பி சென்றவர்களின் மோட்டார் சைக்கிள் எண்ணினை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் வழிப்பறியில் ஈடுபட முயன்றது ஈரோடு சூரம்பட்டிவலசு கட்டபொம்மன் வீதியை சேர்ந்த ஜான்பாட்சா மகன் ரியாஷ் (21), சூரம்பட்டி வலசு அணைக்கட்டு சாலையை சேர்ந்த சம்பத் குமார் மகன் சிவக்குமார் (21), அதேபகுதியை 5-வது அணைக்கட்டு வீதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் யோகேஷ் (22) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்