பள்ளி மாணவர்கள் போன்று சட்டசபையை கட் அடிக்கிறார் ஸ்டாலின் - பொன்.ராதா கிண்டல்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவர்களை போல் ஸ்டாலின் சட்டசபையை கட் அடிப்பதாக கூறியுள்ளார். #radhakrishnan #stalin
பள்ளி மாணவர்கள் போன்று சட்டசபையை கட் அடிக்கிறார் ஸ்டாலின் - பொன்.ராதா கிண்டல்
Published on

தஞ்சையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய சாலைகள் அமைப்பதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்றும், தமிழகத்தில் புதிய சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார்.

மேலும், கிழக்கு கடற்கரை பகுதியில் அமையும் ரெயில்பாதை திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அப்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது ஆனால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு இன்னும் உறுப்பினர் பட்டியலை கூட தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com