நேற்று தொடங்கிய உண்ணாவிரதத்தை இன்று வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவைக் கண்டித்து நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் இன்று தனது உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.
நேற்று தொடங்கிய உண்ணாவிரதத்தை இன்று வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
Published on

விருதுநகர்:

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக திரண்டன. கட்டுரை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக வைரமுத்து அறிவித்தார். இருந்தும், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் கூறினர்.

கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தினைக் கைவிட்டார்.  

இரண்டாவது முறையாக கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். பா.ஜ.க தலைவர் எச் ராஜா, எஸ் வி சேகர், சென்பகராமன் ஜீயர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com