ஐபிஎல் அணியின் "blank cheque" ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட்

2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.இரண்டு சீசன்களில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஐபிஎல் அணியின் "blank cheque" ஆஃபரை நிராகரித்த ராகுல் டிராவிட்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிரவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டதால் ஐ.பி.எல். அணியில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவியும் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து ஐ.பி.எல். அணிகள் அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தது. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராகுல் டிராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத செக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் டிராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் ஆஃபரை நிராகரித்துள்ளார்.

ராகுல் டிராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 சீசனில் விளையாடியுள்ளார். வார்னே ஓய்வுக்குப்பின் இரண்டு சீசன்களில் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com