

மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவும் துபாய் விமானம் மதுரை வந்தது.
அந்த விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய நுண்ணறிவு பிரிவு சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து விமானத்தில் வந்த 120 பயனாளிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
போலீசார் சூட்கேசில் இருந்த தங்க கட்டிகளை கைப்பற்றியபோது ஒன்றரை கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.