

அவருக்கு மாற்று வீரரை தேடும் பணிக்கு டோனி வழிவிட்டது கிடையாது. இந்நிலையில்தான் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துள்ளார். இதனால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் எம்எஸ் டோனிக்கு ரிஷப் பந்துதான் சரியான மாற்று வீரர் என சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்-ஆக இருப்பார் என நான் நினைக்கிறேன். டெஸ்ட் போட்டியில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரது திறமையை நிரூபிக்கலாம்.