சாலை வசதி கோரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் பெண்கள் மனு

சாலை வசதி போடுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பொதுமக்களிடம் ஆணையர் கூறினர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் 20 வருடங்களுக்கு முன்பு எஸ்.பி.ஆர். நகர், தங்கராஜ் நகர் உள்ளிட்ட மனை பிரிவுகள் உருவானது. இங்கு பலர் வீடு கட்டி குடியேறினர். ஆனால் இதனால் வரை அப்பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அப் பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு அப்பகுதிக்கு சாலை வசதி போடுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பொதுமக்களிடம் ஆணையர் கூறினர்.

இதன் மீது இதனால் வரை எந்தெந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், தொகுதி எம்.எல்.ஏ.விடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையேற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com