மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட முகாம்

ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்சமூகநலத்துறை செயலர் உதயகுமார், தேசிய நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டு க்கழகம், மாற்றுத்தி றனாளி தேசிய மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன.

முடநீக்கு உபகரண ங்களான 3 சக்கர சைக்கிள், காதுகேட்கும் கருவி, கைத்தடி, சக்கர நாற்காலி, செயற்கை கை, கால்கள், ஊன்றுகோல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்க ப்படுகிறது.

பயனாளிகளை கண்டறிய குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் முகாம் நடக்கிறது. முகாமை ரிச்சர்ட் எம்.எல்.ஏ.,

தொடங்கி வைத்தார். சமூகநலத்துறை செயலர் உதயகுமார், தேசிய நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். துறையின் மேலாண் இயக்குனர் சாந்தி வரவேற்றார்.

விழாவில் மாற்றுத் திறனாளிகள் மேம்பா ட்டுக்கழக ஊழியர்கள், மாவட்ட மறுவாழ்வு மைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com