ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் கோரிக்கைசெவிலியர்களுக்கான பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாணவ காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் 5 அரசு மருத்துவமனைகளும், 32 ஆரம்ப சுகாதார நிலையங்க ளும், காரைக்காலில் 1 அரசு பொது மருத்துவமனையும், 13 ஆரம்ப சுகாதார நிலை யங்களும், மாகியில் 1 அரசு பொது மருத்துவ மனையும், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ஏனாம் பகுதியில் 1 அரசு பொது மருத்துவமனையும் 1 ஆரம்ப சுகாதார நிலையமும் என மொத்தம் 56 ஆஸ்பத்திரிகள் உள்ளன.

இதில் கடந்த சில ஆண்டு களாக பார்மசி, பிசியோ தெரபி, லேப் டெக்னீசியன் மற்றும் லேப் அசிஸ்டண்ட் போன்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

தற்போது செவிலியர்களுக்கான பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி தலையிட்டு மருத்து வமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து பிரிவு காலி இடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com