இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ரூ.200 கோடி வரி பாக்கி

கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரபரப்பு தகவல்பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜோசப், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருந்து கம்பெனியை விரிவாக்கம் செய்ய கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 8.5.2018-ல் தேதியில் அனுமதி கொடுத்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜோசப், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது.

இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மத்திய மந்திரி அமித்ஷாவிடம் மனு அளிக்க உள்ளேன். புதுவை கலால்துறையில் சாராயக்கடை, பெட்ரோல், டீசல் பங்க் நடத்திய முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் ரூ.200 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர். இதை வசூலிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com