சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்காக திரண்ட ஆதரவாளர்கள்

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
சட்டசபை முன்பு திரண்ட எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்.
சட்டசபை முன்பு திரண்ட எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்.
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் புகார் கூறி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

எம்.எல்.ஏ. போராட்டம் குறித்து தகவலறிந்த அவரின் ஆதரவாளர்கள் திருபுவனை தொகுதியிலிருந்து சட்டசபை முன்பு குவிய தொடங்கினர். இதையடுத்து சட்டசபையின் இருபுறமும் போலீசார் பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் சட்டசபை முன்பு திரண்ட ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பதாகைகளில் திருபுவனை தொகுதியை புறக்கணிக்காதே, பா.ஜனதா வளர்ச்சியை தடுக்காதே என குறிப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com