சிறப்பு துப்புரவு பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
Published on

புதுச்சேரி:

புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.

கிராமப் பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ்,மேலாளர் வீரம்மாள், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com