மத்திய அரசு உத்தரவை தொடர்ந்து புதுவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவை தொடர்ந்து புதுவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை
Published on

புதுச்சேரி:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவையிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சட்ட விரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் தலைமை செயலர் ராஜூவர்மா நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பு மற்றும் தொடர்புடைய ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, நேஷனல் உமன்ஸ் பிரண்ட், ஜூனியர்பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com