நகராட்சி ஆணையருடன் எதிர்கட்சி தலைவர் சிவா ஆலோசனை

கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி. தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாருடன் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை செய்த காட்சி.
புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாருடன் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை செய்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது, வில்லியனூர் கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட கொம்பாக்கம் குமரன் நகர், கோதண்டபாணி நகர், நெசவாளர் நகர், ஒட்டாம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் தார்ச்சாலை அமைத்தல், கொம்பாக்கம்பேட் காந்தி பள்ளி வழியாக செல்லும் வாய்க்கால் சீரமைப்பது, குப்பம், குப்பம்பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை அள்ளுதல், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாருதல், கொசு மருந்து தௌித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொம்பாக்கம், குப்பம்பேட் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகர், மருத்துவ அதிகாரி துளசிராமன், நில அளவை அதிகாரி அண்ணாமலை, கொம்பாக்கம் தி.மு.க நிர்வாகிகள் கந்தசாமி, ஜெகன்மோகன், ராஜேந்திரன், கதிரவன், ஜனார்த்தனன், தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com