மின் ஊழியர் சேவைக்கு புதிய செயலி தொடக்கம்

கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் புதிய செயலி, இணையதளத்தை தொடங்கி வைத்தார்.மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

மின் ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களின் சேவைக்காக புதிய செயலி, இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா வம்பாகீரப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவு கடன் சங்க தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். பதிவாளர் யஷ்வந்தையா விழாவை தொடங்கி வைத்தார். கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் புதிய செயலி, இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை தலைவர் வேல்முருகன், பொருளாளர் குமரன், இயக்குனர்கள் தணிகாசலம், திருமூர்த்தி, முருகன்,பரசுராமன், ராமமோகன், மணிகண்டன் உட்பட மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com