ஜனாதிபதி பாதுகாப்புக்கு கடற்படை கப்பல்கள் ரோந்து

ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கடற்கரை சாலையில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகும். ஜனாதிபதி செல்லும் வழிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி பாதுகாப்புக்கு கடற்படை கப்பல்கள் ரோந்து
Published on

புதுவைக்கு வந்த ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை கடற்கரை சாலையில் கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாகும். அதோடு இன்று காலை ஜனாதிபதி கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்தார். இதனால் அவர் தங்கியிருந்த மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் இணைந்து கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, காரைக்காலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய 2 இந்தியன் கோஸ்டல்கார்டு கப்பல்கள் ஜனாதிபதி தங்கியிருந்த விருந்தினர் மாளிகை எதிரே கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜனாதிபதி செல்லும் வழிகளில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com