கரை ஒதுங்கிய அறிய வகை ஆமை

ஆழ்கடலில் வசிக்க கூடிய ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டை இட்டு செல்கின்றன.50கிலோ எடைகொண்ட மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து இறந்து விடுகின்றன.
கரை ஒதுங்கிய அறிய வகை ஆமையை படத்தில் காணலாம்.
கரை ஒதுங்கிய அறிய வகை ஆமையை படத்தில் காணலாம்.
Published on

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை புதுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை யோர பகுதியில் தற்போது ஆழ்கடலில் வசிக்க கூடிய ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து முட்டை இட்டு செல்கின்றன.

அவ்வாறு கடற்கரையை நோக்கி வரும் ஆமைகளில் ஏராளமான ஆமைகள் 50கிலோ எடைகொண்ட மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களில் சிக்கி அடிபட்டு காயம் அடைந்து இறந்து விடுகின்றன.

இந்நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் கலைமணி, மணிவண்ணன் ஆகியோர் மூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள செடிகொடியில் சிக்கிய நிலையில் ஆலிவ் ரேட்லி ஆமை ஒன்று அங்கிருந்து செல்ல முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. அதனை கண்ட போலீசார் அதனை பத்திரமாக மீட்டு கடலுக்குள் விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com