மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதுவை மாநில அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை முத்து லட்சுமி அம்மாள் கைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.போட்டியை தொடங்கி வைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்ற காட்சி.
மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை முத்து லட்சுமி அம்மாள் கைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து போட்டி நடுவர்களுக்கு சீருடை வழங்கினார். புதுவை காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியை தொடங்கி வைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com