

புதுச்சேரி:
உப்பளம் தொகுதியில் மகளிர் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு துறை மூலம் விதவை, முதிர் கன்னிகள், திருநங்கை போன்றவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட் டுத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் செல்வம், விநாயகமூர்த்தி, ராகேஷ், ரகுமான், பஸ்கல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.