நெடுஞ்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும்-செல்வகணபதி எம்.பி. வலியுறுத்தல்

புதுவையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் பயணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. ஆகவே புதுவையில் குறிப்பாக உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் வணிகம் மிகவும் பாதிக்கப்படுவதாக உணவு விடுதிகள் சங்க நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

பாராளுமன்றத்தில் புதுவை எம்.பி. செல்வகணபதி பேசியதாவது:-

புதுவையிலிருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் பயணத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

முன்பு அளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர் 2019-க்குள் பணியை முடிக்காததால், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இருந்தது.

இதற்காவே அவர்கள் வேலூர் வழியாக 70 கி.மீ கூடுதலாக பயணிக்க வேண்டியதால் எரிபொருள், நேரம், விரயமாகிறது.

ஆகவே புதுவையில் குறிப்பாக உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் வணிகம் மிகவும் பாதிக்கப்படுவதாக உணவு விடுதிகள் சங்க நிர்வாகிகள் ெதரிவித்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பதில் அளிக்கும் போது இந்த இரண்டு வழி சாலை போடும் பணிகள் கொரோனாவின் 2 அலைகளால் தாமதமாகி விட்டன. ஆனாலும் புதிய ஒப்பந்ததாரர் மூலம் வரும் ஆண்டு மே மாதத்திற்குள் சாலை பணி முடியும் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com