சமவெளியில் பயிரிடும் வகையில் புதிய மிளகு செடி

புதுவை பெண் வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்புகூடப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் புதிய மிளகு ரகங்களை பதியம் போட்டுள்ளார்.
புதிய மிளகு ரக செடியுடன் பெண் வேளாண் விஞ்ஞானி லட்சுமி. 
புதிய மிளகு ரக செடியுடன் பெண் வேளாண் விஞ்ஞானி லட்சுமி. 
Published on

புதுச்சேரி:

புதுவை கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி லட்சுமி.

தோட்ட பயிர்களில் பல உயர்ரகங்களை கண்டறிந்து நவீன வேளாண்மையில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக, அவரின் தந்தையும் பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் அறிஞருமான வெங்கடபதியும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

அவரது வழிகாட்டுதலின் படி மலைபிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய மிளகு ரகங்களை சமவெளி பகுதிகளில் பயிரிடும் வகையில் புதிய ரகத்தை பெண் வேளாண் விஞ்ஞானி லட்சுமி கண்டு பிடித்துள்ளார்.

சமவெளிகளில் கொடியாகவும், செடியாகவும் அதிக மகசூல் தரும் புதிய மிளகு ரகத்தை கண்டறிந்து, அனைத்து பருவங்களிலும் பயிரிடும் வகையில் லட்சுமி அறிமுகம் செய்துள்ளார். இதற்காக, கூடப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் புதிய மிளகு ரகங்களை பதியம் போட்டுள்ளார்.

வழக்கமான மிளகு கொடிகள் 40 அடி உயரம் வரை வளரும் 25 அடிக்கு பிறகு தான் மிளகை தரும். அதற்கு 4 ஆண்டுகள் ஆகும். மிளகை சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையில் செடிகளுக்கு இலை வழியாக நுண்ணூட்ட சத்துகளை வழங்க வேண்டும்

அதிகபட்சம் 12 அடி உயரம் வளரும் புதிய ரக மிளகை கீழே இருந்து அறுவடை செய்யலாம்.

இந்த கொடிகள், கிளை–களாக பரவாமல் ஒரே நேராக வளர்ந்து செல்வதால் கொத்துக்கொத்தாக அதிக காய்கள் பிடிக்கும். செடியின் அடிப்பகுதியி–லிருந்து மேல் பகுதி வரை காய்கள் இருக்கும். ஒரு கிலோ பச்சை மிளகை அறுவடை செய்து காய வைத்தால் 300 கிராம் காய்ந்த மிளகு கிடைக்கும். இந்த புதிய தொழில் நுட்பத்தில், அறுவடைக்கான 40 சதவீதம் செலவை குறைக்க முடியும்.

ஒரு ஏக்கரில் 2 ஆயிரத்து 700 செடிகளை நடவு செய்யலாம். அதிகபட்சம் 5 அடி உயரத்திலேயே இந்தச் செடிகள் வளர்ந்து காய் காய்க்கும். இந்த மிளகு செடிகள் ஆண்டு முழுவதும் காய்க்கும் திறனுடையது. ஒரு செடி நடவு செய்த 6 மாதங்களில் காய் காய்க்கத் தொடங்கும். 3-வது ஆண்டில் 1½ கிலோவில் தொடங்கி 3 கிலோ வரை மிளகு காய்க்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com