

புதுச்சேரி:
புதுவை கருவடி க்குப்பத்தில் நரிக்குறவர் மற்றும் ஒட்டர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்துகள் வழங்கினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் அனிதா மற்றும் நந்தினி வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.முகாமில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பயனடைந்தனர்.