நரிகுறவர் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்

குழந்தைகள் ஆர்வத்துடன் அவருக்கு உணவை ஊட்டினர்.குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்.
நரிகுறவர் குழந்தைகளுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காட்சி.
நரிகுறவர் குழந்தைகளுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் குழந்தைகள் பாதுகாப்பு மையம் உள்ளது.

நரிகுறவர் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் இங்குள்ள குழந்தை களுக்கு புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலை உணவு வழங்கி தீபாவளி கொண்டா

டினார். அப்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவருக்கு உணவை ஊட்டினர்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆந்திராவின் புகழ்மிக்க காக்கிநாடா காஜா, ஜாமூன் ஆகியவற்றுடன் பட்டாசு மற்றும் புத்தாடைகளை சபாநாயகர் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளுடன் அவர் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்.

அப்போழுது குழந்தைகள் தீபாவளி வாழ்த்து பாடலை பாடி சபாநாயகர் செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அரசியல் தலைவர்களும் வர்த்தக பிரமுகர்களும் இது போன்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விழாக்களை கொண்டாட வேண்டும் என சபாநாயகர் செல்வம் கேட்டு கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com