கலெக்டர் அலுவலகம் முற்றுகை

புதுவையில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.புதுவையில் பேனர், கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.
பேனர் கட்அவுட் அகற்றாததை கண்டித்து சமூக அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த காட்சி.
பேனர் கட்அவுட் அகற்றாததை கண்டித்து சமூக அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவையில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுவையில் பேனர்- கட் அவுட் வைக்க தடை சட்டமும் அமலில் உள்ளது. இருப்பினும் புதுவையில் பேனர், கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை கண்டி த்தும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும் சமூக அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இதன்படி தந்தை பெரியார் திராவிட கழகம் சிந்தனையாளர் பேரவை, அண்ணா பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் ராஜீவ் காந்தி சிலை அருகே திரண்டனர்.

மக்கள் வாழ்வுரிமை ஜெகநாதன், அண்ணா பேரவை சிவஇளங்கோ, திராவிடர் விடுதலை கழகம் லாகு அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், சிந்தனையாளர் பேரவை கோ.செல்வம், தலித் சிறுத்தைகள் அறிவுமணி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, எஸ்.டி.பி.ஐ. பரக்கத்துல்லா, நாம் தமிழர் கட்சி ரமேஷ் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்களை போலீசார் வழுதாவூர் சாலையில் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com