ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி-கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நீர்பாசனக்கோட்டம் சார்பில் தாவரவியல் பூங்காவில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.செந்தில் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஆட்டுப்பட்டி, ரோடியர்ப் பேட் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிதண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏஎ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த னர்.

இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணி த்துறை அதி காரிகளிடம் உடனடியாக தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று வலியுறு த்தினார். இதையடுத்து பொதுப்பணித் துறை நீர்பாசனக்கோட்டம் சார்பில் தாவரவியல் பூங்காவில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலைப்பொறியாளர் வெங்க டேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளை செயலாளர்கள் ஆறுமுகம், செந்தில் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com