ஏழைகளுக்கு வேட்டி-சேலை-அன்பழகன் வழங்கினார்

புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் பாண்டுரங்கன் 2-ம் ஆண்டு நினைவு நாள் அரியாங்குப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.ஏழை, எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாண்டுரங்கன் நினைவுநாளையொட்டி ஏழைகளுக்கு அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வேட்டி, சேலை வழங்கிய காட்சி. 
பாண்டுரங்கன் நினைவுநாளையொட்டி ஏழைகளுக்கு அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வேட்டி, சேலை வழங்கிய காட்சி. 
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் பாண்டுரங்கன் 2-ம் ஆண்டு நினைவு நாள் அரியாங்குப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.

அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து ஏழை, எளியோர் 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர் நடராசன், இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர் ராஜாராமன், நகர செயலாளர்கள், அன்பழக உடையார், சித்தானந்தம் துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசேரன், நாகமணி, குமுதன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com