பிரார்த்தனைக்கு சென்ற பாதிரியாருக்குக்கு கொலை மிரட்டல்

ரெயில் நிலையம் எதிரேஉள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வரும் கிறிஸ்தவ பாதிரியாருமாக இருப்பவர் மகிமை.

 சம்பவத்தன்று மதியம் இவர் ரெயில் நிலையம் எதிரேஉள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.

அப்போது ஆலய நுழைவு வாயிலில் பாதிரியார் மகிமை பைக்கில் சென்ற போது புதுவை பெட்டிகெனல் தெருவை சேர்ந்த சாமி என்ற ஆரோக்கிய சாமி என்பவர் வழிமறித்து தகாதவார்த்தை களால் திட்டினார்.

 மேலும் தனக்கு அரசியல் செல்வாக்கும் அடியாள் பலமும் உள்ளது. உன்னை என்றாவது ஒரு நாள் கொலை செய்து விடுவேன் என்று கூறியதோடு சிகரெட் புகையை பாதிரியார் மகிமையின் முகத்தில் ஊதினார். இதையடுத்து பாதிரியார் மகிமை ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com