போலாந்து பிரதமராக பதவியேற்றார் மேத்யூஸ் மொராவெய்கி

போலாந்து நாட்டின் பிரதமராக இருந்த பீட்டா சைட்லோ ராஜினாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேத்யூஸ் மொராவெய்கி நேற்று பதவியேற்றார்.
போலாந்து பிரதமராக பதவியேற்றார் மேத்யூஸ் மொராவெய்கி
Published on

போலாந்து நாட்டின் பிரதமராக பீட்டா சைட்லோ கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். இவர் சட்டம் மற்றும் நீதி கட்சியை சேர்ந்தவராவார். இந்நிலையில், போலாந்து நாட்டின் எதிர்கட்சியினர் சார்பில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

நேற்று இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மேல் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பீட்டா சைட்லோ எளிதாக வெற்றி பெற்றார். இருப்பினும் சைட்லோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் அளித்தார். அவர் அங்கம் வகிக்கும் சட்டம் மற்றும் நீதி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com