ஜூனியர் உலகக் கோப்பை- பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் இந்தியா வருகை

ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி
Published on

புதுடெல்லி:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வந்து சேர்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீரர்களை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். தூதரகத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு இன்று மதிய விருந்து வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறிய அவர், வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், திறமையுடனும் செயல்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை மத்திய திரும்பப் பெற்றதுடன்  மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவை அறிவித்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.  காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஆனால், பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில், பாகிஸ்தானுடன் உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com