தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் கோடை மழை சில இடங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி முடிய (4 நாட்கள்) கோடை மழை, சில இடங்களில் இடியுடன் பெய்ய உள்ளது. அதற்கு பிறகு பெய்யுமா? என்பதை அதற்கு பிறகுதான் தெரிவிக்க முடியும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு வருமாறு:-

உசிலம்பட்டி, தக்கலை, கடலாடி தலா 2 செ.மீ., பவானி, நிலக்கோட்டை, மானாமதுரை, ஈரோடு, பெரியகுளம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com