search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு இடைத்தேர்தல்- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
    X

    வயநாடு இடைத்தேர்தல்- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

    • வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விளக்கம்.
    • தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளது.

    வயநாடு தொகுதி எம்.பி.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, வயநாடு தொகுதி காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், வயநாடில் இடைத்ததேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளது.

    அப்பேது அவர், "கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது.

    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை" என்றார்.

    Next Story
    ×