search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு
    X

    தீர்ப்பு

    வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு

    • உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.
    • விசாரணையில் இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் காரணம் என தெரிய வந்தது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாரணாசியில் இந்துப் பல்கலைக்கழகம் அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.

    இந்நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

    Next Story
    ×