search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரம்மிப்பூட்டும் ஏஐ தொழில்நுட்பம்- தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்- வைரலாகும் வீடியோ
    X

    பிரம்மிப்பூட்டும் ஏஐ தொழில்நுட்பம்- தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்- வைரலாகும் வீடியோ

    • காணொலி முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது.
    • காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

    தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களின் குரல்களில் தேசிய கீதம் பாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

    மேலும், இந்த முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது. சுதந்திர தினத்தன்று நாட்டின் முக்கிய தலைவர்களை அவர்களின் வடிவத்தில் நெருங்கி காணவும், அவர்களுடன் கொண்டாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதோ அந்த காணொலி..

    Next Story
    ×