என் மலர்
இந்தியா

பட்ஜெட் 2025-26: 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக ரத்து
- கப்பல் கட்டுமானத்திற்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்கு தொடரும்.
- கடல்சார்ந்த பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
* லித்தியம் - ஐயோன் பேட்டரிகளுக்கான சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது.
* கப்பல் கட்டுமானத்திற்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்கு தொடரும்.
* ஏற்றுமதிக்கான 7 வரிகள் ரத்து செய்யப்படுகிறது.
* டிவி பேனல் இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
* 12 வகையான அரிய வகை கனிமங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
* 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக ரத்து.
* நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உள்ளது.
* ஏற்றுமதிக்கான வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
* 82 பொருட்களுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரியில் ஒன்று மட்டுமே வசூலிக்கப்படும்.
* கடல்சார்ந்த பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
* லித்தியம் பேட்டரிக்கு முழு வரி விலக்கு - எலெக்ட்ரிக் (EV) வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு.
* நாடு முழுவதும் புதிதாக 5 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.






