மேகதாதுவால் தமிழகத்திற்கு தான் அதிக பயன் - டி.கே. சிவக்குமார்

மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் ஆதாயமடையும் என்று கூறினார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
DK Shivakumar
Published on

பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த முறை சாதகமான சூழலை உருவாக்கி இருக்கியது என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் ஆதாயமடையும் என்று அவர் கூறினார்.

தமிழகம் வந்துள்ள டிகே சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்."

"சென்னையில் உள்ள துப்புரவு திட்டம் என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. இதற்காக நான் அரசாங்கத்தையும் ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளனர். இந்த வருகை எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல கற்றல் செயல்முறையாக இருந்தது," என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com