நிர்மலா சீதாராமன் தலைமையில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்- காணொலி வாயிலாக பங்கேற்ற பிடிஆர்

மத்திய நிதித்துறை இணை மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து ஆலோசனை
நிர்மலா சீதாராமன் தலைமையில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்- காணொலி வாயிலாக பங்கேற்ற பிடிஆர்
Published on

சென்னை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதன்பின் இப்போது காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. இதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி மற்றும் மாநில நிதியமைச்சர்கள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம் சார்பில், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் பங்கேற்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய வரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பது குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com