search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கறி சமைக்கும் தகராறில் வாலிபர் கொலை
    X

    கோழிக்கறி சமைக்கும் தகராறில் வாலிபர் கொலை

    • சுசீல்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சுசீல்கோஸ்வாமியை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கோச்சாரம் பகுதியை சேர்ந்தவர் சுசீல்கோஸ்வாமி. இவர் தனது நண்பர்களான தீரஜ் மண்டல், சுஜித்விஜய்கோஸ்வாமி, பாலா நிமிஷ்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்து உள்ளனர்.

    அப்போது சுசீலிடம், தீரஜ் மண்டல் கோழிக்கறி சமைத்து தரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அனைவரும் அன்று இரவு அதே வீட்டில் ஒன்றாக படுத்து தூங்கினர்.

    அப்போது சுசீல்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த தீரஜ் மண்டல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஐடி காரிடார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சுசீல்கோஸ்வாமியை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×