ஓடும் மோட்டார் சைக்கிளில் காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம்பெண்

நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் இளம்பெண் காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓடும் மோட்டார் சைக்கிளில் காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம்பெண்
ஓடும் மோட்டார் சைக்கிளில் காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம்பெண்
Published on

சாம்ராஜ்நகர்:

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை (தாலுகா) டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். திடீரென அந்த இளம்பெண் மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் அமர்ந்தார். அவர் முன்பக்கம் தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து இறுக அணைத்துக் கொண்டார்.

மேலும் இருவரும் சில்மிஷத்திலும், சல்லாபத்திலும் ஈடுபட்டனர். ஆனால் காதலன், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அப்படியே ஓட்டிச் சென்றார். இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்து முகம் சுழித்தனர். இருப்பினும் அந்த காதல் ஜோடி தங்களை மறந்து உல்லாச வானில் பறந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதுதொடர்பாக வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com