search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை தலை துண்டித்து கொன்ற கட்டிட தொழிலாளி
    X

    தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பிரசன்னா கணவர் ஷாஜியுடன் உள்ள பழைய படம்.

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை தலை துண்டித்து கொன்ற கட்டிட தொழிலாளி

    • திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார்.
    • அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள ஆலபடம்பு பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரசன்னா(38).

    ஷாஜி மற்றும் பிரசன்னாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரசன்னா கண்ணூர் கட்டிலபீடிகா பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தார்.

    இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மனைவியின் ஊருக்கு ஷாஜி வந்திருக்கிறார். அப்போது அவர் மனைவியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    அதில் ஆத்திரமடைந்த ஷாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொலை செய்தார். பிரசன்னாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு பிரசன்னா தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த ஷாஜி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியை தலை துண்டித்து கொன்ற ஷாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் பையனூர் போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் கண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×