என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் புதிதாக நிபா தொற்று பாதிப்பு இல்லை
- தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது.
- நேற்று 7-வது நாளாக யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து உஷாரான சுகாதாரத்துறை அதிகாரிகள், கோழிக்கோட்டில் முகாமிட்டு தொற்று பாதித்து பலியானவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தனர். அவர்களில் பலருக்கு நிபா சோதனை நடத்தப்பட்டதில், மேலும் 4 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் உடல்நல பாதிப்பு ஏற்படுவோருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் புதியதாக யாருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. நேற்று 7-வது நாளாக யாருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை.
இருந்தபோதிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்