தீபாவளி கொண்டாட்டத்தின் போது மோதல் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை- ஆந்திராவில் பரபரப்பு

கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது மோதல் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை- ஆந்திராவில் பரபரப்பு
Published on

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கஜுலுரு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சின்னி, பேரன் ராஜு. இவர்கள் 3 பேரும் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களுடைய கைகளில் அரிவாள்கள் இருந்தன.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரமேஷ் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com