பெண்ணாக நடித்து டேட்டிங் மூலம் ரூ.2 கோடி மோசடி- வாலிபர் கைது

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். தினேஷிடம் பணம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
பெண்ணாக நடித்து டேட்டிங் மூலம் ரூ.2 கோடி மோசடி- வாலிபர் கைது
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தில்ஷிப் நகரை சேர்ந்தவர் தினேஷ். இவர் தன்னை ஒரு பெண்ணாக காட்டி டேட்டிங் செயலி மூலம் ஒரு வாலிபருடன் நட்பு கொண்டார்.

சில வாரங்கள் அவருடன் அரட்டை அடித்த தினேஷ் அவசர தேவை என்று கூறி அவரிடமிருந்து ரூ 4.09 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் பெற்றார்.

இதேபோல் இந்திய டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி பலரிடம் இருந்து ரூ.2 கோடி வரை பணம் பறித்தார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடன் டேட்டிங்கில் ஈடுபடுபவர் பெண் இல்லை ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்தனர்.

தினேஷிடம் பணம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com