search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி காணிக்கை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி காணிக்கை

    • பக்தர்களுக்கு 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 67,193 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்களில் 9.7 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவில் உண்டியலில் ரூ.120 கோடியே 5 லட்சம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பக்தர்களுக்கு 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 67,193 பேர் சாமி தரிசனம் செய்தனர். 28,750 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் .

    ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×