search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சித்தூர் அருகே மனைவியுடன் பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை
    X

    சித்தூர் அருகே மனைவியுடன் பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

    • தாமோதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பெத்த பஞ்சாயத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக தாமோதர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருவ பத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதர் (வயது 24). பினுகூறு பகுதியை சேர்ந்தவர் அனுராதா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி தம்பதியினர் இருவரும் அனுராதா வீட்டிற்கு பைக்கில் சென்றனர்.

    பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் இருவரும் பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். இடுக்க நெல்லூர் என்ற இடத்தில் வந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இவர்களது பைக்கை 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    அவர்கள் பைக்கில் இருந்த தாமோதரை இழுத்து கீழே தள்ளி கல்லால் சரமாரியாக தாக்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனுராதா கத்தி கூச்சலிட்டார். அவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த சங்கரப்பா என்பவர் இதனைக் கண்டு ஊருக்குள் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் தகவலை தெரிவித்தார். பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மர்ம நபர்கள் தாமோதரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அனுராதா அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    தாமோதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பெத்த பஞ்சாயத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக தாமோதர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×