search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகாலயாவில் 4.0 என்ற ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்
    X

    மேகாலயாவில் 4.0 என்ற ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

    • பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

    மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை 9.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து, பீதியமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

    Next Story
    ×