search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காளஹஸ்தி கோவிலில் பெருமாள் சிலைக்கு அடியில் தங்கம், நவரத்தின கற்கள் மீட்பு
    X

    பெருமாள் சிலைக்கு அடியில் இருந்த தங்கம், நவரத்தின கற்கள்.

    காளஹஸ்தி கோவிலில் பெருமாள் சிலைக்கு அடியில் தங்கம், நவரத்தின கற்கள் மீட்பு

    • கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.
    • வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    இதனால் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர். காளஹஸ்தி சிவன் கோவிலுடன் இணைந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று புனரமைப்பு பணியின் போது மூலவர் வரதராஜ பெருமாள் சிலை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றினர்.

    அப்போது மூலவர் சிலையின் அடிப்பகுதியில் 37 தங்க தகடுகள், 3 லட்சுமி உருவம் பதித்த தங்க நாணயங்கள், 7 செம்பு தகடுகள் என ஏராளமான நவரத்தின கற்கள் இருந்தன.

    இந்த நவரத்தின கற்கள் விலை உயர்ந்தது என அதிகாரிகள் கூறினர்.

    இதனை கண்டு திடுக்கிட்ட அதிகாரிகள் அவற்றை மீட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.

    தங்கம், நவரத்தின கற்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இதையடுத்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு பூஜை செய்யப்பட்டு. பாலாலய பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

    வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. பணிகள் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×